Wednesday, 25 August 2010

என்னுடன் பேசுவாயா






ஒரே ஒரு முறை தான் என்றாலும் 

ஒரே ஒரு கணம் தான் என்றாலும்

உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் நான். 

மறுகணமே 

அது கடைசி சந்திப்பாய்

ஆன பொழுது முதல் 

இந்த நிமிடம் வரை

ஈரம் நிறைந்த இம்மனதில்

உன் நினைவை தவிர வேறொன்றுமில்லை..

சொல்ல முடியாத உன் காதலை 

சொல்லி கொண்டிருந்ததே 

உன் மௌன பார்வை என்னிடம்.

திறக்காத உன் இதழ்கள் கூட 

திருடி விட்டு போனதே என் இதயத்தை..

15.08.2010
அன்று

எங்கே தொலைத்தாய் ...???

எனக்கான உன் வார்த்தைகளை.....

நீ பேசுவாய் என்று நானும்..

நான் பேசுவேன் என்று நீயும்..

கடைசியில் இருவரும் பேசாமல்

நம் இருவரின் கண்கள் பேசியதே

ஆனால் நீ மட்டும் என்னிடம் பேசவில்லையே..!

உன் வார்த்தைகள் கிடைக்காததால் 

இன்று...

கண்ணீரில் ஆறுதல் தேடுகிறேன்.

No comments:

Post a Comment