உன் நிழல் காணத் துடிக்கிறது என் நெஞ்சம்
Sunday, 1 January 2012
" அழகான தேடல் இந்த அன்பான காதல் "
உன் வருகைக்காய் காத்து கிடந்தும்
உன்னையே எதிர் பார்த்து கிடந்தும்
உன்னோடிருக்கும் தருணங்கள் சுகங்களானது..,
உன்னை நீங்கியிருக்கும் தருணங்கள் சுமைகளானது..,
எல்லாம் தெரிந்தவள் என்று
உன்னை ஏற்றுகொள்ளவில்லை
என்னைப் பற்றி மட்டுமே தெரிந்துகொள்
என்றே எடுத்துக்கொண்டேன் உன்னை ...
உனக்கே தெரியாது என்னில் நீ தான் இருக்கிறாய் என்று ...
என்
வாழ்வின்
பொக்கிஷம்
என்ன
என்றால்..,
நான்
உன்னோடு
இருந்த
தருணம்
மட்டுமே
அன்பே
......
அன்பாக பேசிய உன் வார்த்தைகள் இன்று
எங்கே போயின... !!!
எனக்கான உன் வார்த்தைகள் ...???
நீ என்னை பார்த்து பேச வருவாய் என்று
நான் எதிர் பார்த்த நாட்கள் தான் எத்தனை.....
நீ வராததால்..,
சொல்ல முடியாத மன வேதனையுடனே
நான் திரும்பி சென்றிருக்கிறேன்.
இத்தனை நாட்களாய் என்னிடம் பேசாமலே இருந்து இருக்கிறாயே
எப்படி முடிந்தது உன்னால் மட்டும்
என்னோடு பேசாமல் இருக்க... ???
கொஞ்சம் எனக்கும் கற்றுக்கொடு ..,
நீ தந்த இந்த இனிமையான வலிகளை இனி நான் மறப்பதற்கில்லை
எவ்ளோவோ ஆச
எத்தனையோ ஏக்கம்
இதெல்லாம் யார் கிட்ட நான் சொல்லி அழ
என் சுக துக்கங்களை எல்லாம் உன்னிடம் மட்டுமே சொல்ல
உன் வருகைக்காய் .....................
உனக்காகவே நான் காத்திருப்பேன்..,
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment