Wednesday, 30 November 2011

நட்பு காதலாகுமா..?






என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............ 

பல மணி நேரங்கள் 
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை 

ஏன்? 
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு 
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?.... 
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வரவேண்டும்..?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள் 
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா..?

No comments:

Post a Comment