Saturday, 31 December 2011

தனிமையை தேடி






என் மனதிற்கு பிடித்தவள் " நீ " தான் 
அதனால் சொல்கிறேன் 
என் ப்ரியமானவள் " நீ " என்று..,


என் ப்ரியமானவளே நான் இன்று நானாக இல்லை
என் நிலையும் சொல்ல தெரியவில்லை 
புதிய உலகம் புதிய பூமி 
இதில் நான் புதிதாய் பிறந்தது போல் புதிய வாழ்க்கை....
என் சோகம் எல்லாம் சுகமாக்கினாய்...
என் தனிமை எல்லாம் தூரமாக்கினாய்...
இவை அனைத்தையும் தந்தவள் " நீ "
உனக்காய் ஒன்றும் செய்ய முடியாதவனாய் நான்..,
கண்ணீர் மட்டும் காணிக்கையாய் 
உன்னை ஏற்றுக்கொள்ள துணிவின்றி 
மீண்டும் தனிமையை தேடி பயணிக்கின்றான்...!





ப்ரியமுடன் 
nrramesh



Monday, 26 December 2011

உனக்காக நான் காத்திருப்பேன்


என்னை விட உன்னை அழகாய் பார்ப்பவர்கள்
இந்த உலகில் யாருமில்லை..,
உனக்காக நான் காத்திருப்பேன் என்றும்..........


ப்ரியமுடன்
nrramesh

Tuesday, 20 December 2011

" உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன் "



தொலை பேசியில் 
அன்பை தந்தாய்.....
உருவம் இன்றி உணர்வுகளுடன் வாழ்ந்தேன் ....

கணணியிலே உந்தன்
நிஜத்தை பார்த்தேன் ..
உணர்வுகளுக்கு உருவம் கிடைத்தது ......

உணர்வுகளை பிரிந்த போதே 

உள்ளம் தீயில் வெந்த வேதனையை உணர்ந்ததே ....
உந்தன் உருவத்தை எப்படி நான் பிரிவேன் ...

உன்னோடு வாழாத போதும் 

உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்
கற்பனையில் ஆவது ...









ப்ரியமுடன்
nrramesh

Wednesday, 14 December 2011

என் உயிர்................. " நீ "




யாரோ சொன்னார்கள்..,


" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
ஆனால்.., எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
 "என்றும் உன் நினைவு " மட்டும் தான் ....


காரணம்....
நான் நேசிப்பவளும் " நீ " தான்.....
என்னை நேசிப்பவளும் " நீ "  மட்டும் தான்...
என் உயிர்................. " நீ "


Saturday, 10 December 2011

" நட்பா..? காதலா..?




நட்பா..? காதலா..?


நட்பு பெரியதா.. ? காதல் பெரியதா ..?
நண்பன் கேட்டான்


நான் முதலில் கற்றுக் கொண்டது
***  நட்பு தான் ***


நான் இது வரையில் காத்து வருவது
***  நட்பு தான் ***


என்னை நானாக பார்த்தது
***  நட்பு தான் ***


காதலின் இனிமையான பாகம்
***  நட்பு தான் ***




எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
" காதல் "  தான்
எனவே..,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.


" mm  "  S  நான் உன்னை காதலிக்கிறேன்....

i love you .... 
for ever .........


No matter how many times I get hurt because of you, 
I won't leave you. 
Because even if I have a hundred reasons to leave you, 
I'll look for that one reason to fight for you!!


There is only one reason I fight with you..
Always the same reason..
I love you and I don't want to lose YOU.




ப்ரியமுடன்
nrramesh

Monday, 5 December 2011

" உனக்காக மட்டுமே "



உனக்காக மட்டுமே 
என் இதயம் துடிக்க வேண்டுகிறேன்.

உன்னைப் பார்க்க என் கண்கள் துடிக்கிறது....... 
என் கண்களுக்கு நான் என்ன சொல்லி புரியவைப்பேன்....... 
" நீ "  என் "இதயம்" என்று.......

நீ சொல்ல தேவை இல்லை. 
என் இதயத்துக்கு தெரியும் நீ யாரு என்று

மெளனமாய் இருக்கும் என் மனது மெளனமாய் பேசுகிறது 
உன்னை தொலைத்து விட்டேனே என்று.........

மெளனமான வார்த்தை மெளனமாகி போனதடி பெண்ணே ..
என்னோடு நீ இல்லாமல்...

என்னோடு பேச ....
மீண்டும் " நீ " வருவாய் என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் நான்..




ப்ரியமுடன்
nrramesh




Saturday, 3 December 2011

பூக்குமா வசந்தம்…







கண்கள் உனைக் கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு ..?
உன்னோடு ஒருவனப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா ..?
விடை தெரியா வினாக்கள் 
என்னுள் விளையாடி ஒய்ந்தன 
என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி 
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லடி 
அது நிச்சயமாய் காதல் தான் 
உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்..?
அதனால் தான்..,
என் முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது 
யாரும் அறியாமல் ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழை தான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்று தானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்








ப்ரியமுடன் 
nrramesh

Wednesday, 30 November 2011

நட்பு காதலாகுமா..?






என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............ 

பல மணி நேரங்கள் 
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை 

ஏன்? 
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு 
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?.... 
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வரவேண்டும்..?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள் 
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா..?

Sunday, 27 November 2011

நீ வருவாய் என…





நேற்று பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான் உனக்காக 

நீ சென்ற உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என 
காத்து நிற்கிறேன்


அன்பே!
--------- 

நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவ் உலகில்
யாருமில்லா அனாதையாய்..!

உனை பார்த்த போது தான்
எனக்கும் ஒருவள்.., 

இந்த உலகில் என்று நினைத்தேன்..! 


அன்பே! 

---------

நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்தை  
எனக்கும் தருவாயா..?
உன் வருகைக்காக இவன் 






ப்ரியமுடன்
nrramesh 

Wednesday, 23 November 2011

" நிரம்பி வழியும் காதல் "






நினைவின் அடுக்குகளில்

மடிப்பு கலையாமல் ஏறிச் செல்கிறாய்..

உன் பாதம் பட்ட இடங்களில்

பூத்துக் கிடக்கிறது உன்மேல் வைத்த என் பாசம் ...


என் இதய பலூனில் நிரம்பி வழியும் உன் காதல்..

உன் ஒற்றைச் சொல்லில் வெடித்துச் சிதறி

பிரபஞ்சத்தை நிரப்ப பலூனாகிறது பிரபஞ்சமும்..


இலையோடு மழை பேசும் ரகசியமாய்

என் அலைபேசியோடு உன் குறுஞ்செய்தி..



ப்ரியமுடன்
nrramesh

Sunday, 20 November 2011

" என் காதல் "








கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி என் கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்...

இறந்து விடலாமடி ஒருகணம்
கடந்து போன நினைவுகளை சுமந்து வாழ்வது கடினமடி

ஒவ்வொரு இரவிலும்
உன்னோடு உரையாடிய காதல் வார்த்தைகள்
என் செவிகளில் ஒலிக்கி
தடி
இதை கேட்டு இதயம் தவி தவிக்கிதடி
தவி தவிக்கும் இதயத்தை கண்டு
கண்ணீராய் வருகுதடி என் கண்களில் 
என் காதலியே ...
உன் நினைவால்......
தினமும் இறக்கிறேன் தானடி
ஒவ்வொரு அணுவாக துடிப்பது நானடி
ஆனால்..,
உன்னை நோக்கி வளர்ச்சி அடைந்து செலிகிறதடி
என் காதல்

Saturday, 19 November 2011

என் காதலை உணர்வாயோ..?





உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்.., 
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல். 

உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்.., 

உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.

உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்.., 

உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.

உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்.., 

உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்.

உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது 

என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.

உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும் 

நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல். ...






ப்ரியமுடன் 
nrramesh 

Wednesday, 16 November 2011

என்ன சொல்ல போகிறாய்...?



வாழ் நாள் முழுவதும் 
உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்கதோ
என்று ஏங்கி கொண்டிருக்கிறேன்...





என்ன சொல்ல போகிறாய்...?

Sunday, 13 November 2011

நீ என்ன செய்வாய் அன்பே....???



என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ நிறுத்திடலாம்
என் மனதை
நீ எரித்திடலாம்
உன்மேல் வைத்த என் காதலை
நீ என்ன செய்வாய் அன்பே....???